திருமணம் முடிந்த அடுத்த சில நிமிடத்திலே உயிரிழந்த காதல் ஜோடி..!

அமெரிக்காவில் டெக்ஸால் பகுதியை சார்ந்த ஹார்லி மோர்கன்(19) என்பவர் தன் தோழி பவுட்ரியாக்ஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தின் நீதிபதியின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் பதிவில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தது பார்க்கிங்கில் இருந்த தங்கள் காரில் ஏறினார்.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில் கார் நான்கு முறை சாலையில் உருண்டு சென்றது. இந்த சம்பவத்தில் காதல் ஜோடி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து மோர்கன் தாய் லஷாவ்னா கூறுகையில் , திருமணத்திற்கு வாழ்த்த வந்தேன். ஆனால் இவர்கள் இறப்பதை பார்க்கவேண்டிய நிலைமை வந்து உள்ளது என கண்ணீர் விட்டு கதறினார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.