விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Default Image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் இந்த தினத்தில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.இதன் பின்னர் சிலையை கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்படுவது வழக்கமாகும்.இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

எனவே தமிழகத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதிலும் குறிப்பாக  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணிகளில் ஆண், பெண் தொழிலாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts