மோடி வருகையின்போது பேனரால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? திருநாவுக்கரசர் கேள்வி

மோடி வருகையின்போது பேனரால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பான நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.குறிப்பாக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இது குறித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், பேனர் வைக்கக்கூடாது என்று அதிமுக அறிக்கை வெளியிட்டது.ஆனால் பிரதமர் மோடிக்கு பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது.மோடி வருகையின்போது பேனரால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025