நீயா? நானா? கோபிநாத் கதாநாயகனாக களம் இறங்கும் “இது எல்லாத்துக்கும் மேல”!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளவர் தான் கோபிநாத். இவர் நீயா? நானா? எனும் பிரசித்தமான நிகழ்ச்சி நடத்துகிறதன் மூலம் அதிகளவில் அறியப்படுகிறார். தனது துல்லியமான தமிழ் பேசும் திறமையால் அதிகளவில் இவர் அறியப்படுகிறார்.
இந்நிலையில், இவர் இயக்குனர் பாரதி கணேஷ் அவர்களின் இயக்கத்தில் “இது எல்லாத்துக்கும் மேல” எனும் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த படத்தில் இவருடன் காமடி நடிகர் சதீஷும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய கோபிநாத் தற்போது கதாநாயகனாக களம் இறங்குவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025