வேலை செய்த வீட்டில் நகை ,பணம் கொள்ளையடித்த நேபாள இளைஞர் ..!

சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டையை சார்ந்த சினிவாசலு என்பவர் வீட்டில் நேபாளத்தை சார்ந்த சுஜன் என்ற இளைஞர் சமையல்காரனாக வேலை செய்தார்.இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வேலையை விட்டு சென்று உள்ளார்.
இதை தொடர்ந்து திடீரென சினிவாசலு வீட்டிற்கு வந்த சிஜன் அனைவருக்கும் சமையல் செய்து தருவதாகக் கூறி உள்ளார்.வீட்டில் இருந்தார்கள் முன்னாள் சமையல்காரன் தானே என நம்பி அவரை சமையல் செய்ய அனுமதி கொடுத்து உள்ளனர்.
பின்னர் சமையல் அறையில் சென்று அனைவருக்கும் உணவு செய்து கொடுத்து உள்ளார். அவர் சமைத்த உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார்.அதை சாப்பிட்ட சினிவாசலு ,அவரது மனைவி , மகள் மற்றும் டிரைவர் ஆகியோர் மயங்கி உள்ளனர்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுஜன் வீட்டில் இருந்த 11 சவரன் தங்க நகைகளையும் , 20 ரொக்க பணத்தையும் கொள்ளை அடித்த சென்று உள்ளார்.
சினிவாசலு குடும்பத்தினர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது வீட்டில் இருந்து 11 சவரன் நகை மற்றும் 20 ரொக்க பணம் காணாமல் போனது பார்த்து அதிர்ச்சியடைத்தனர். இதை தொடர்ந்து இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் டவர் சிக்னல் மூலம் உதவியுடன் சுஜனை கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025