இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை சுற்றுப்பாதையில் சுமந்து செல்லும் ஆக்ஸியம்-4 விண்கலம், விரைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும்.

NASA - Axiom4

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணம் பல தடைகளுக்கு பின், இறுதியாக நேற்றைய தினம் மதியம் 12:01 மணி அளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது.

நாசாவின் தகவலின்படி, ஆக்ஸியம்-4 குழுவினரை ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் இப்பொது பூமியைச் சுற்றி வருகிறது. மேலும் காலை 7 மணிக்கு ET (இந்திய நேரப்படி மாலை 4:30 மணி) மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும்.

இந்த பயணத்தில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியப் பிறப்பு விண்வெளி வீரர் ஆவார். இதற்கு முன், ராகேஷ் சர்மா (1984) சோவியத் யூனியனின் உதவியுடன் விண்ணுக்குச் சென்றார், ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) இந்தியர் செல்வது இதுவே முதல் முறை.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த உடன் என்ன நடக்கும்?

ஆக்ஸியம்-4 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த உடன், டிராகன் இறுதி டாக்கிங் சூழ்ச்சிகளைச் செய்யும், அதைத் தொடர்ந்து வெஸ்டிபுலில் அழுத்தம் செய்யப்படும், கேப்சூல் திறந்த பின் ஆக்ஸியம்-4 குழுவினர் உள்ளே நுழைவார்கள்.

அதன்படி, நிலையத்துடன் தானியங்கி முறையில் இணைக்கப்படும். இணைதல் செயல்முறையில், விண்கலம் ISS-ன் இணைப்பு பகுதியுடன் பொருத்தமாக இணையும். இது மிகவும் துல்லியமான மற்றும் தொழில்நுட்பரீதியாக சவாலான செயல் முறையாகும்.

இணைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் ISS-க்குள் நுழைவார்கள். இதற்கு முன், விண்கலத்திற்கும் ISS-க்கும் இடையிலான அழுத்தம் (pressure) சமநிலைப்படுத்தப்படும். விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இந்த இணைப்பு சில மணிநேரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றால் நேரலை செய்யப்படும்.

வீரர்களின் பணி என்ன?

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு வீரர்கள் (நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, மற்றும் அங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு) ISS-ல் நுழைந்த பின், தங்கள் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்குவார்கள். வீரர்கள் 14 நாட்கள் ISS-ல் தங்கி 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.

சுபான்ஷு சுக்லா குறிப்பாக, விண்வெளியில் பிராணவாயு மற்றும் நீர் இல்லாத சூழலில் செடிகள் மற்றும் பயிர்களின் வளர்ச்சி குறித்த ஆய்வில் ஈடுபடுவார். இது விண்வெளியில் உணவு உற்பத்தி மற்றும் நீண்டகால பயணங்களுக்கான முக்கியமான ஆராய்ச்சியாகும். மற்ற ஆராய்ச்சிகளில், புவியீர்ப்பு இல்லாத சூழலில் பொருட்களின் நடத்தை, உயிரியல், மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் அடங்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்