சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது -ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில்

சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது என்று ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நீண்ட நாட்கள் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ரஜினியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை கூறிவருகின்றனர்.அந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் இன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் ரஜினி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில் கூறுங்கியில்,
ரஜினியின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு,சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது.படத்தின் விளம்பரத்திற்காக இவ்வாறு பேசுவார்கள். வரேன் வரேன்னு பலமுறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் .ஆனால் இதுவரை வந்தபாடில்லை என்று தெரிவித்தார்.
ரஜினி-கமல் இணைவதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு ”சினிமா வசனங்கள் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது” என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025