ஐஎஸ்எல் கால்பந்து: திகில் கோல் அடித்து முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை எஃப்சி !

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்10 அணிகள் விளையாடி வருகிறது. போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் சென்னை அணி சென்னை எஃப்சி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணியும் , ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதியது.
முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை.பின்னர் கூடுதல் நேரத்தில் சென்னை அணி வீரர் ஆண்ட்ரி ஸ்சிம்ப்ரி முதல் கோல் அடித்தார்.
இதை தொடர்ந்து பதிலுக்கு ஹைதராபாத் வீரர் மேத்யூ கில்காலோன் பதில் கோல் அடிக்க ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் சென்னை வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் திகில் கோல் அடித்து சென்னை அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025