இறந்த போன நபர்போல் ஆள்மாறாட்டம்..! ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் திருட்டு..!

- சென்னையில் இறந்த நபர் உயிரோடு இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு.
- பெண் உட்பட 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த பெருமாள் கடந்த 2009-ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு சொந்தமாக 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் இருக்கிறது. இந்நிலையில் வேறொரு நபரை இவர் தான் பெருமாள் என ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2013-ல் அவரிடம் இருந்த அந்த நிலத்தை வாங்கியது போல ரகுக்குமார் என்பவர் போலி ஆவணங்களை தயார்ப்படுத்தி அபகரித்துள்ளார்.
பின்னர் அந்த இடத்தை ரகுக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி பெயரில் பத்திர பதிவு செய்தது அறியப்பட்டது. அதன் பின் நிலத்திற்கு சொந்தகாரரான பெருமாளின் மகன் கோபி என்பவர் போலீசிடம் புகார் கொடுத்தார். அதனை மத்திய குற்றப்பிரிவில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த மோசடியில் ரவிக்குமாரும் அவரது மனைவி ஜெயக்குமாரி மற்றும் உடந்தையாக செயல்பட்ட போத்திராஜ் ஆகியோரை போலீசார் கைது சேந்தனர். பின்னர் அந்த அபகரிப்பில் மற்றொரு நபரான சரவணன் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025