3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கியது..! நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலால் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு.!

- ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் 12 தொகுதிகளில் மட்டும் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது .அதில் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கி உள்ளது.
இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் 12 தொகுதிகளில் மட்டும் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மீதியுள்ள ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், பாபு லால் மராண்டி உள்ளிட்ட போட்டியிட்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025