நண்பனை பெண்ணாக மாறவைத்து திருமணம் செய்து கொண்ட நபர்!பின்னர் நடந்த விபரீதம்!

Default Image
  • நண்பனை காதலித்து அவனை பெண்ணாக மாறவைத்து திருமணம் செய்துகொண்டு உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவன்.
  • காவல்துறையினரிடமும் திருநங்கை சங்கத்திடமும் புகார் அளித்த நபர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் ஆவார்.இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவரது வகுப்பை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவனுக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அபிஷேக்கின் நடை உடை பாவனையில் பெண் இருப்பதை அறிந்த சந்தோஷிற்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.பின்னர் கல்லூரி படிப்பு முடிவடைந்தவுடன் அபிஷேக்கை பிரிய மறுத்த சந்தோஷ் அவருடன் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என முடிவெடுத்து சந்தோஷ் அமிஷேக்கை வலியுறுத்தி வந்துள்ளார்.ஆனால் அபிஷேக் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் பெற்றோர்களை கவனிக்க வேண்டும் எனக்கூறி புறக்கணித்துள்ளார்.

பின்னர் சந்தோஷ் நீதான் என் உலகம் என சினிமா வசனங்களை கூறியதால் பின்பு அபிஷேக் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் தெரிகிறது.பின்னர் அபிஷேக் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் தன் பெயரையும் அர்சனா என மாற்றிக்கொண்டுள்ளார்.பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடுத்தனம் நடத்தி வந்துள்ளனர்.ஆனால் திருமணம் செய்த சில நாட்களில் அபிஷேக்கை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

பின்னர் உன்னுடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அபிஷேக் என்கிற அர்ச்சனாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.இதனால் நடுத்தெருவுக்கு வந்த அபிஷேக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் திருநங்கைகள் சங்கத்திடம் அர்ச்சனா என்ற அபிஷேக் புகார்  தெரிவித்துள்ளார் இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads