இரத்த நிறத்தில் காட்சியளிக்கும் வானம்!கலங்கி நிற்கும் மக்கள்!

Default Image
  • ஆஸ்திரேலியாவில் காட்டு தீ வெகுவில் பரவியதால் அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்டியளித்துள்ளது.
  • இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் காட்டு தீ மிகவும் பரவலாக பரவியுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்சியளித்தது.அப்பகுதி மக்கள் அனைவரும் கடற்கரை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இதனை அடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்ற இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-க அதிகரித்துள்ளது.

மேலும் அதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியில் வீசும் காற்று திசை மாறியதன் காரணமாக காட்டு தீ மோசமாக பரவியதாக அப்பகுதி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் காட்டு தீ தொடர்ந்து பரவி வருவதால் ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies