ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டு நான் -தே..!தற்புகழும் செல்லூர்

Default Image
  • மதுரை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் மாநில அளவிலான குடியரசு தின  விளையாட்டுப்போட்டி விழாவினை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.
  • துவக்கி வைத்து பேசுகையில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் விளைவாக  தனிமனித ஒழுக்கம் ஆனது வளர்கிறது.ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நானே இருக்கின்றேன் என்றும் கூறினார்.

மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு விழாவினை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றி  துவக்கி வைத்தார்,துவக்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் தமிழகத்தில் 37 மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு என்று 13 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது மாணவப்பருவக் காலங்களில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் தனிமனித ஒழுக்கம் ஆனது வளர்கிறது. ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நானே இருக்கின்றேன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு மட்டுமே 168 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தென்னிந்தியாவிலேயே  தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts