பதவிக்காக பைக் எரித்த இந்து முன்னணி பிரமுகர் கைது..!

Default Image

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம்  அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் 6 மாதத்திற்கு முன் இந்து முன்னணியில் சேர்ந்தார். 3 மாதத்திற்கு முன்பாக இந்து முன்னணியில் அதவத்தூர் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்தி சென்றதாகவும் , இரவு 2 மணி அளவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களால் தாக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது  இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறி  திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.

இதையெடுத்து போலீசார் நடத்திய  முதல்கட்ட விசாரணையில்
ரியல் எஸ்டேட் தொழில் , பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சக்திவேல் இந்து முன்னணி அமைப்பில் பதவி பெறுவதற்காகவும், பைக் கடன் நிலுவைக்காகவும் இருசக்கர வாகனத்தை எரித்து விட்டு நாடகம் நடத்தியது தெரியவர சக்திவேல் உள்ளிட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh