குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000..இதர பொருட்கள் வழங்க ரூ.2.187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம்- அரசாணை!அரசாணை குறித்த விவரம் உள்ளே

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களை கருத்தில் கொண்டு அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் பொருட்களை வழங்குவதற்கு ரூ.2,187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளவை:
இதைத்தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வீதம் நிவாரணம் மற்றும் இலவச பொருட்களை ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே வழங்க உணவுப்பொருள் வழங்கல் ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் விநியோ கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறை பின்பற்ற வேண்டும். ரூ.1000 மற்றும் இலவசபொருட்களை பெற விரும்பாதவர்கள், ‘www.tnpds.gov.in’ மற்றும் tnepds கைபேசி செயலி மூலம் அட்டை எண்ணை குறிப்பிட்டு விருப்பத்தை அறிவிக்கலாம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஆகியோர் ரூ.1000 நிவாரணத் தொகையை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரூ.2,187 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025