ஏப்ரல் 12 வரை இத்தாலியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு!

Default Image

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் 200 நாட்களுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான பாதிப்பால் 144 தடை உத்தரவை முதன்முறையாக மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தியது இத்தாலி தான்.

இந்நிலையில், இத்தாலியில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 11,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

ஆனால், இந்த வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய அதிகபட்ச பாதிப்பால் இத்தாலி அரசு ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தும் என நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts