அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்

Default Image

அமெரிக்க அதிபர் தேர்தல்  போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது.எனவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில்,அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதனிடையே திட்டமிட்டப்படி நவம்பர் மாதத்தில்  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று  ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.அதேபோல் ஜனநாயக கட்சியும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடந்தி  வருகிறது. ஆனால் செனட்சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கு கட்சிக்குள் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.எனவே ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக பெர்னி சாண்டர்ஸ் அறிவித்தார்.இதன் விளைவாக டிரம்பை எதிர்த்து, ஜோ பிடென் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பெர்னி சாண்டர்ஸ்  ஜனாதிபதி தேர்தலிலேயே டிரம்புக்கு எதிராக களம் காண முயற்சித்தார். அந்த சமயத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts