இன்று இங்கெல்லாம் மளிகை, காய்கறி கடைகளை மாலை 5 மணி வரை திறக்கலாம்

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று மட்டும் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 26-ம் தேதி முதல் நேற்று இரவு 9 மணி வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மே 1-ஆம் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி வழக்கம் போல காலை 6 மணி முதல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாள் முழு முடக்கம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025