தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்.!

Default Image

தமிழகத்தில் இதுவரை 2,757 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளையுடன் முடிவடைய ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மத்திய அறிவித்தபடி மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 174 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கோவையில் இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூரில் 114, செங்கல்பட்டில் 90, மதுரையில் 88, திண்டுக்கல்லில் 81, திருவள்ளூரில் 68, திருநெல்வேலி 63 போன்ற மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுப்படியாக இன்று அரியலூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு 26 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts