தமிழகத்தில் டாஸ்மாக் இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா ?

இரண்டாம் நாளான இன்று தமிழகத்தில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்ததால் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து 40 நாள்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் கடந்த திங்கள்க்கிழமை டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் திறக்கப்பட்டது.
நேற்று , தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற இடங்களில் காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை கடை இயங்கின. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.170 கோடி வரை மது விற்பனை நடைபெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று தமிழகத்தில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025