வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சி.!

விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் எனும் ஊரில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காலை வழக்கம் போல ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன.
இதனை கண்டு பதறிய ஊழியர்கள் உடனே இந்த கொள்ளை முயற்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு குழு இந்த புகாரை விசாரித்தது.
அதன் பிறகு அந்த வங்கி கிளையில் இரவு காவலர் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க கூடும் என கூறி, உடனே இரவு காவலரை நியமிக்கவங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி கொள்ளை முயற்சி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025