எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ராகுல்காந்தி

Default Image

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்று  ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில், இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், சீன ராணுவம் தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,   எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் . சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நம் வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? என்று பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh