தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.6600 கோடி கிடைத்ததா, இல்லையா?

Default Image

தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு இம்மாத 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று வெளிட்ட அறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது, தொடர்ந்துவரும் ‘கொரோனா ஊரடங்கு’ துயரத்தின் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை – எளிய அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.

கொரோனா நோயினால் வாழ்வாதாரம் இழந்து – பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இன்னும் தங்களது நெருக்கடியிலிருந்து மீளவில்லை. கடந்த மார்ச் 24-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நான்கு மாத ஊரடங்கின் காரணமாக, அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கையிலும் புயல் வீசி, ஏராளமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை – எளியவர்களுக்கு அரிசி வழங்குவதில் மட்டும் ஏன் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நவம்பர்வரை இலவசமாக வழங்க மறுக்கிறார் முதலமைச்சர்..? கொரோனா வைரசுக்கு தேவையான வெண்டிலேட்டர், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டுமே இதுவரை தமிழ்நாட்டிற்கு 6600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் பிரதமருடன் நடைபெற்ற  காணொலிக் காட்சி ஆலோசனையில் கூட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி வேண்டும் என்று முதலமைச்சர்  மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு தமிழக நிதித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கொரோனா பணிக்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ள நிதி 1500 கோடி ரூபாய்தான் இருக்கும் என்று கூறி – அந்தச் செய்தி ஆங்கிலப் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர், முதலமைச்சர், தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள் ஆகிய மூவரில் யார் சொல்வது சரியான கருத்து..?
நிதித்துறை அதிகாரிகளின் கருத்து சரியென்றால், மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு தவறு என்று முதலமைச்சர் இதுவரை கூறாமல் மவுனம் காப்பது ஏன்.? என மு.க  ஸ்டாலின் அறிக்கை வெளிட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir