சபாநாயகர் நோட்டீஸ்.. சச்சின் பைலட் வழக்கு இன்று விசாரணை.!

Default Image

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு இருந்தார்.

இதையடுத்து,சமீபத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் சட்டசபைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா மகேஷ் ஜோஷி உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள்  இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும்  நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். அனுப்பட்டும் நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமைக்குள் (அதாவது இன்றைக்குள்)பதில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு மீது விசாரணை நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. அப்போது , இந்த வழக்கை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh