கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்.!

ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025