தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328க்கு விற்பனை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து கொண்டேதான் வருகிறது, மேலும் கடந்த 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.41,568க்கும், 3ம் தேதி ரூ.41,592க்கும், 4ம் தேதி ரூ.41,616க்கும் விற்கப்பட்டது. மேலும் இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரன் ரூ.42,592க்கும் விற்றது. இந்த விலை தங்க விலை வரலாற்றில் மிக அதிகப்பட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 2.20 அதிகரித்து 83.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025