தோனியின் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது….. கவுதம் கம்பீர்.!

Default Image

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில் கவுதம் கம்பீர் தோனி ஓய்வு பெற்றது வருத்தம் தருகிறது, மேலும் அவர் ஓய்வு பெற்றாலும் அவரது சாதனைகளை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நிகராகமாட்டார்கள், எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் இந்திய அணியை மீட்பவர் தோனி.

அதனை தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர் ஐசிசி உலக கோப்பை போட்டியில் 3 முறை கோப்பையை வென்று சாதனை செய்தவர் தோனி, மேலும் இந்த சாதனையை தோனியை தவிர வேறு எந்த இந்திய கேப்டனும் சாதிக்க இயலாது , மேலும் பல சதங்களின் சாதனைகளை முறியடிக்க பட்டாலும் ரோஹித் சர்மா இரட்டை சதம் முறியடிக்கப்படும் சாதனைகள் இருக்கலாம் , ஆனால் இந்திய கேப்டன் தோனி செய்து இந்த சாதனையை எந்த ஒரு கேப்டனும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY