இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ்.! துபாய் புறப்பட்ட சி.எஸ்.கே வீரர்கள்.!

தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது தாமதமாகவும், அதிலும், இந்தியாவில் நடக்க சாத்தியமில்லாததால், ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது.
இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் என மொத்தம் 51 பேர் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகுதான் துபாய் புறப்பட்டுள்ளனர். துபாய் சென்றதும் அவர்களுக்கு அங்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025