கொரோனா பரிசோதனை மேற்கொண்டுவந்த நோயாளி ஜார்கண்ட் மருத்துவமனையில் தற்கொலை!

கொரோனா பரிசோதனை மேற்கொண்டுவந்த நோயாளி ஜார்கண்ட் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஜார்க்கண்டில் ராஞ்சி எனும் நகரில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கார்வா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025