லடாக்கில் மீண்டும் அத்துமீறிய சீனா – விரட்டியடித்த இந்தியா.!

ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதாவது, நேற்று மற்றும் நேற்று முன்தினம் பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. ராணுவ, தூதரக பேச்சுவாரத்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறி உள்ளது என்றும் அமைதியை கடைபிடிக்கவே இந்திய ராணுவம் விரும்புகிறது எனவும் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025