ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்!

ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்.
கொரோனா வைரசின் தாக்குதலால் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விக்கிரபாண்டி எனும் 16 வயது மாணவன் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்துள்ளார்.
பாடங்கள் புரியவில்லை என பெற்றோரிடம் கூறியும் அவரது தந்தை படித்துதான் ஆக வேண்டும் என கண்டிப்புடன் கூறியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் விக்ரபாண்டி யாரும் வீட்டில் இல்லாதபோது தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் உடனடியாக சேர்த்தாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் ஏற்கனவே ஒரு மாணவனும் இதுபோல ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025