டெல்லியில் ஒரே நாளில் 2,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,79,569 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,481 ஆக உள்ளது. மேலும் 1,858 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,58,586 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி 16,502 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் கொரோனா தொற்றால் இரண்டாம் நாளாக 2000-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025