தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் அடுத்த லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலையை ஆய்வு மையம் தகவல்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025