ராஜஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு..!

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் காணவில்லை. கவிழ்ந்த படகில் 25 முதல் 30 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடம் பூண்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையும், மாநில பேரிடர் மீட்பு படையும் அந்த இடத்தை அடைவதற்குள் படகில் இருந்தவர்களை மீட்க உள்ளூர் கிராமவாசிகள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு உடல்கள் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் பாதுகாப்பிற்காக ஆற்றின் மறு கரையில் சென்று இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025