சதம் விளாசிய கே.எல்.ராகுல்..! 207 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப்..!

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 6-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே அகர்வால் 26 ரன்னில் வெளியேற, பின்னர் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 17 ரன்னுடன் விக்கெட்டை இழக்க தொடக்க வீரராக இறங்கிய கே.எல்.ராகுல் தனது அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசி 132* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். 207 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025