விசாரணைக்காக ஆஜரான இயக்குநர் அனுராக்..!

இயக்குனர் அனுராக் காஷ்யப்பை இன்று காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இயக்குநர் அனுராக் கஷ்யப் வந்தடைந்தார்.
இயக்குனர் அனுராக் 2014 இல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பயால் கோஷ் குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அனுராக் மறுத்துள்ளார்.
இந்நிலையில், மும்பை போலீசார் இன்று காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்தில் இயக்குனர் அனுராக் விசாரிக்க நேற்று சம்மன் அனுப்பினர்.
நீதி கேட்டு பாயல் கோஷ் நேற்றுமுன்தினம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025