#BREAKING: ஹத்ராஸ் வழக்கு.. விசாரணையை கையில் எடுத்த சிபிஐ..!

ஹத்ராஸ் வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, 4 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது.
பலத்த காயங்களுடன் இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!
June 26, 2025