வேல் யாத்திரை : தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக!

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக பொதுச்செயலாளர்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6 முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு பல அரசியல் கட்சி பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் இருவரும் வேல் யாத்திரை நடத்த தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த யாத்திரை மூலம் கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் உள்ளதால், தமிழக அரசு சார்பில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால், இந்த தடையை மீறி நேற்று வேல் யாத்திரை நடைபெற்ற நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா, பொன்ராதாகிருஷ்ணன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து, இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்க கோரி, பாஜக பொதுச்செயலாளர் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி சத்யநாராயணா மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025