#ChennaiRains : கடல் போல் காட்சியளிக்கும் மெரீனா கடற்கரையின் சுற்று வட்டாரம்.!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் , அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த அதிதீவிர புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் பட்சத்தில் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே சென்னை உட்பட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது .எனவே பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.அந்த வகையில் சென்னையின் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது .சாலைகள் முழுவதும் வெள்ளம் கரை புரண்டோட மெரினா கடற்கரையின் இருபுறமும் கடல் போல் காட்சியளிக்கிறது .
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025