நாளை முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!

Default Image

தமிழகத்தில் நாளை முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. கடந்த சில மாதங்களாக தான் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வைக்கலாம் என இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. அதன்படி வருகிற செவ்வாய்க் கிழமை அதாவது நாளை முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது எனவும், பெற்றோர்களின் விருப்பப்படி ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எப்பொழுதம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற பாதுகாப்புவழிகாட்டுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இதை கண்காணிப்பதற்காக கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies