இளைஞனின் கண்ணை கட்டி காட்டில் வைத்து சித்ரவதை – கொடூர மிருகங்களாக மாறிய மனிதர்கள்!

Default Image

திருடியதாக கூறி ராகுல் எனும் இளைஞனின் கண்ணை கட்டிவிட்டு மனிதாபிமானமற்று பின்புறம் பிரம்பால் தாக்கிய கொடூரமான இளைஞர்களின் செயல் பலரையும் கண்கலங்க செய்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பூண்டிமேடு தெருவில் வசித்து வரும் ராகுல் எனும் இளைஞன் திருடியதாக கூறப்படுகிறது. ராகுல் கூலி தொழிலாளியாக வேலை செய்பவராம். இவர் திருடியதாக கூறி கும்பலாக சிலர் அவரை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவரது கண்ணை கட்டி வைத்து மரத்துடன் சேர்த்து இருவரை பிடிக்க வைத்துவிட்டு சரமாரியாக பிரம்பால் பின்புறம் தாக்கியுள்ளனர்.

ராகுல் எவ்வளவோ கெஞ்சியும் அந்த கும்பலின் கோபம் அடங்கவில்லை. சற்று நேரத்தில் வலி தங்க முடியாமல் ராகுல் மயக்கமடையவே அப்போதும் விடாமல் அந்த கொடூர கும்பல் ராகுலை மாறி மாறி தாக்கியுள்ளது. மனிதர்களே மனிதர்களிடம் மனிதாபிமானமற்று சென்று விட்டார்கள். சற்றும் ஓயாமல் தாக்கிய கும்பலிடம் இருந்து மீளமுடியாமல் ராகுல் நீண்ட நேரம் இந்த கொடுமையை அனுபவித்துள்ளார். இது தெடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகியதை அடுத்து இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்