வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணிக்கும் சுபான்ஷு சுக்லா விண்ணில் இருந்து உரையாடியுள்ளார்.

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை ISS-க்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டமாகும்.
இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டனர். இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை டிராகன் விண்கலம் சென்றடைகிறது.
தற்பொழுது, இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளியில் இருந்து நேரடி ஒளிபரப்பில் பூமிக்கு முதல் செய்தியை அனுப்பியுள்ளார். விண்கலத்தில் இருந்தபடி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, “விண்வெளியில் இருந்து உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு குழந்தையைப் போலவே இங்கு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
இந்த தருணத்தை மிகப் பெருமையாக உணர்கிறேன், இது ஒரு சிறிய படி, ஆனால் இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தை நோக்கிய ஒரு நிலையான மற்றும் உறுதியான படி, ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். விண்வெளியில் குழந்தைபோல உணர்கிறேன்.
எந்தவித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது, சர்வதேச விண்வெளி மையத்தில் நேரத்தைச் செலவிட ஆவலாக உள்ளேன். சக விண்வெளி வீரர்களுடன் விண்வெளியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவர்களுடன் பயணிப்பது அற்புதமான அனுபவம் என்றும் கருத்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.