அந்நியன் கதை எனக்கே சொந்தம்- இயக்குநர் ஷங்கர் விளக்கம்..!

அந்நியன் திரைப்படத்தின் கதை தனக்கே சொந்தம் என்று இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலளித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது. என்று ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்த்து இயக்குனர் ஷங்கர் தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஷங்கர் விளக்கம் அளித்திருப்பது ” அந்நியன் திரைப்படத்தின் கதை எனக்கு தான் சொந்தம். திரைப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம் என் பெயர் தான் இடம்பெற்றிருந்தது. சுஜாதாவை நான்தான் வசனம் எழுத அழைத்து வந்தேன். அந்நியன் திரைப்படத்தின் கதையை முழுமையாக பயன்படுத்தும் உரிமை எனக்கு உள்ளது “என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025