கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து…! சித்த மருத்துவரின் ஆலோசனை…!

Default Image

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை மூத்த சித்த மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் மிகக் குறைவான பாதிப்பே இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா வைரஸின் 2வது அலையில் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 1,757 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,கொரோனா குறித்து மூத்த சித்த மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில்,”கொரோனாவானது முதல் அலை,2வது அலை மற்றும் 3வது அலை என மீண்டும் மீண்டும் எத்தனை முறை வந்தாலும் சிறிது கூட கவலைப்பட வேண்டாம்.ஏனெனில்,சித்த மருத்துவத்தில் உள்ள கபசுரக்குடிநீரை விட உலகத்தில் வேறு எந்த சிறந்த மருந்தும் இல்லை.

மேலும்,கொரோனா தடுப்பு மருந்து ரெம்டிசிவரை விட சித்த மருந்து சக்தி வாய்ந்தது என்பதனாலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.எனவே,மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள்.தினமும் இரண்டு வேளை கபசுரக்குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயத்தை குடியுங்கள்.அதோடு சேர்த்து அமுக்காரா சூரணம்,நெல்லிக்காய் லேகியம் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த நோயும் வராது”,என்று ஆலோசனை கூறியுள்ளார்.

குறிப்பு:குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் அனுபவம் உள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்ற பிறகே இந்த மருந்தினை சாப்பிட வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump