இந்தியர்கள் கைலாஸாவிற்கு வர அனுமதி இல்லை- நித்தியானந்தா

Default Image

இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவிப்பு. 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது விலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.80 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாலியல் சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, கைலாஸா தனி தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதில் குடியேறி அதனை தனி நாடாகவும் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் அவ்வப்போது சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நித்தியானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், இதேபோன்று ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளிலும், கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இந்த நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies