#BREAKING: கேரளாவில் முழு ஊரடங்கு.., பினராயி விஜயன் அறிவிப்பு..!

நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மே 16 வரை முழு ஊரடங்கு என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
As directed by the CM, the entire State of Kerala will be under lockdown from 6am on 8 May to 16 May. This is in the background of a strong 2nd wave of #COVID19.
— CMO Kerala (@CMOKerala) May 6, 2021
கொரோனாவின் இரண்டாவது அலைகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மே 16 வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இன்று முதல் தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.