நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!
ஏசி வகுப்புக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா உயர்த்தட்பட்டுள்ளது.
இது பல ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்த்தப்படும் முதல் முறை உயர்வாகும். ரயில்வேயின் இயக்க செலவுகள், எரிபொருள் செலவுகள், மற்றும் பராமரிப்பு செலவுகள் உயர்ந்து வருவதால், இந்த கட்டண உயர்வு மூலம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வு மிகவும் சிறிய அளவில் இருக்கும் என்றும், பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாதாரண ரயில் Non AC (Non Suburban) 2-ஆம் வகுப்பு
- 500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை
- 501 – 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5 உயர்வு
- 1500 – 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10 உயர்வு
- 2501 – 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்வு
ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் கிலோ
மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
மெயில் மற்றும் விரைவு ரயில்கள்:
NON AC
- ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிப்பு
AC Coach
- குளிர்சாதன வசதி: இருக்கை குளிர்சாதன வசதி: 1, 2, 3 வகுப்புகள்
கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. - புறநகர் ரயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை.