தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

Default Image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. இந்த கனமழை நாளை தொடரும் எனவும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில்  மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும்,  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts