டோக்கியோ ஒலிம்பிக்:சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி…!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை சியுங் ந்கன்யியை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து,இஸ்ரேலின் போலிகர்போவை முதல் சுற்றில் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து,முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் வெறும் 28 நிமிடங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதன்படி,இன்று நடைபெற்ற குரூப் ஜே பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையும், 2016 ரியோ வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, ஹாங்காங்கின் சியுங் ந்கன் யினை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் விளையாடி சிந்து ஆதிக்கம் செலுத்தினார்.இதனால்,முதல் செட்டை 21-9 என கைப்பற்றினார்.இரண்டாம் சுற்றில் சற்றே தடுமாறிநாளும்,21-16 என்ற செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்று ஹாங்காங்கின் சியுங் ந்கன் யிக்கு எதிரான போட்டியில் பெண்கள் ஒற்றையர் சுற்றுக்கு 16 வது இடத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts