#BREAKING: எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு..!

Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு.

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 11 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் லாக்கர் சாவி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. வேறு பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தனர். 60 இடங்களில் சென்னையில் 3 , கோவையில் 4 இடங்களில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்